கோவில் வரும் பக்தர்கள் குளிக்கும் போது நீரில் மூழ்கடித்து கொலை செய்து பணம் பறிக்கும் கும்பல் மீது நடவடிக்கை கோரி பாரத் சேனா புகார்

கோவில் வரும் பக்தர்கள் குளிக்கும் போது நீரில் மூழ்கடித்து கொலை செய்து பணம் பறிக்கும் கும்பல் மீது நடவடிக்கை கோரி பாரத் சேனா அமைப்பினர் இன்று புகார் தெரிவித்துள்ளனர்.



இதுகுறித்து பாரத் சேனா அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், மாநிலச் பொதுச் செயலாளர் உங்கள் சிவா உள்ளிட்டோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பிரசிதிபெற்ற வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடவும் திதி கொடுக்கவும் வரும் பக்தர்களை ஆற்றில் குளிக்கும் போது நீரில் மூழ்கடித்து கொலை செய்து பணம் பறிக்கும் செயலில் சிலர் ஈடுபட்டு வருகிறார்கள். இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் கோவில் நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து இச்செயலை தடுத்து நிறுத்தவில்லை எனில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பிற்காக பாரத் சேனாவின் தொண்டர்கள் நிறுத்தப்படுவார்கள். 

கோவில் நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுத்து கோவிலுக்கு வரும் பக்தர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவில்லை எனில் பக்தர்களையும் பொதுமக்களையும் ஒன்று திரட்டி பாரத் சேனா சார்பில் மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" என தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...