பாஜக தலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் காலுன்ற முடியாது -மாநிலங்களவை எம்.பி. கனிமொழி பேச்சு.


பாஜக தலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் காலுன்ற முடியாது எனவும், இந்தியை திணித்து தமிழர்களின் மொழியையும், அடையாளத்தையும் அழித்துவிட பாஜக முயல்கிறது எனவும் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை ஆவாராம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் திமுக சார்பில் இந்தி திணிப்பு மற்றும் நீட் தேர்வு எதிர்ப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக திமுக மகளிரணி செயலாளரும், மாநிலங்களை உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டார்.



அப்போது பேசிய அவர், மத்திய பாஜக அரசை எதிர்த்து குரல் கொடுக்க கூட தமிழக அரசிற்கு தைரியமில்லை எனவும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா முன் குனிந்து நடந்த அதிமுக அமைச்சர்கள், தற்போது டெல்லிக்கு முன் குனிந்து நடக்கிறார்கள் எனவும் தெரிவித்தார். இந்தி மொழியை திமுக எதிர்க்கவில்லை எனவும், இந்தி திணிப்பை தான் எதிர்ப்பதாகவும் சுட்டிகாட்டிய அவர், மைல்கல், மத்திய அரசு அலுவலகங்கள், டிவிட்டர் என அனைத்து இடங்களிலும் இந்தியை நுழைப்பதில் மட்டுமே மத்திய அரசு அக்கறையுடன் செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.

இந்தி தேசிய மொழி இல்லை எனவும், 22 ஆட்சி மொழிகளில் ஒன்று தான் இந்தி எனவும் கூறிய அவர், இந்தி திணிக்கப்பட்டால் மற்றுமொரு மெரினா போராட்டத்திற்கு மாணவர்கள் தயாராகி கொள்ளுங்கள் என தெரிவித்தார். இந்தி கற்றுக்கொள்ளவில்லை எனில் நான் தேசத்துரோகி என்றால், தேச துரோகியாக இருக்கவே பெருமைபடுகிறேன் என கனிமொழி தெரிவித்தார்.

தலைகீழாக நின்றாலும் பாஜக தமிழகத்தில் காலுன்ற முடியாது எனவும், இந்தியை திணித்து தமிழர்களின் மொழியையும், அடையாளத்தையும் அழித்து விட பாஜக முயல்கிறது எனவும் குற்றம்சாட்டிய அவர்,  இந்தி திணிக்கப்பட்டால் மாணவர்கள் ஒன்றுபட்டு நின்று எதிர்க்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...