வால்பாறை பகுதியில் கன மழை பெய்துவருவதால் உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

தமிழகத்தில் நிலவிவரும் கடுமையான வறட்சி மற்றும் வெப்பம் காரணமாக பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதில் பெரிதும் பாதிக்கப்படுவது சமவெளிப் பகுதியைச் சார்ந்தவர்களே. 

கோவை மாவட்டத்தைப் பொருத்தவரையில் சமவெளிப்பகுதிகளில் சில மாதங்களாக மழை பொய்த்துப்போய் இருந்ததாலும், நீலகிரி, வால்பாறை உள்ளிட்ட மலைபிரதேச பகுதிகளில் பெய்யும் மழை மக்களை மகிழ்ச்சிப்படுத்தி வருகிறது.

கடந்த சில மாதங்களாக கடும் வறட்சி நிலவி வந்ததால் வால்பாறையில் உள்ள அனைத்து ஆறுகளும் வறண்டு காணப்பட்டன. வறட்சியின் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகையும் வால்பாறையில் குறைந்து காணப்பட்டது. 

இந்நிலையில், இன்று காலை முதல் வால்பாறைக்குட்பட்ட பல்வேறு எஸ்டேட் பகுதிகளிலும் கன மழை பெய்து வருவதால் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வால்பாறை சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வால்பாறைக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்தால் மட்டுமே வறட்சியின் பிடியில் சிக்கியுள்ள சோலையாறு, சின்னக்கல்லார், நீரார் உள்ளிட்ட அணைகள் மீண்டும் தனது பழைய நிலைமைக்கு திரும்பும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...