சையானிடம் கேரள போலீஸ் விசாரணை

நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான சையான் என்பவர் கடந்த இரு வாரத்திற்கும் மேலாக கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 



இந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சையான் நேற்று இரவு 11.30 மணியளவில் கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். 



இதனைத்தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் காயம் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் சையானிடம் கேரள போலீசார் ஐந்து பேர் இன்று மேற்கொண்டு வருகின்றனர். இதில்  கேரளாவில் விபத்து ஏற்பட்டு சையானின் மனைவி மற்றும் மகள் உயிரிழந்த வழக்கு தொடர்பாக மட்டுமே சையானிடம் கேரள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து, அவரின் உடல்நிலை குறித்தும் மருத்துவர்களிடம் கேரள போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...