குடியிருப்பு வாசிகள் குப்பைகளில் இருந்து பையோகேஸ் தயாரிக்க கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும்- மாநகராட்சி ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில்  100 சதவிகிதம் குப்பைகளை தரம் பிரித்து சேகரம் செய்தல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதில், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், “வருகின்ற ஜூன் மாதம் 5-ம் தேதி உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு தூய்மை பாரத இயக்கத்தின் மூலம் நாடு முழுவதும் 4,041 நகரங்களின் 100 சதவிகிதம் குப்பைகளைத் தரம் பிரித்து சேகரம் செய்ய மத்திய நகர்புற வளர்ச்சி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

ஏற்கனவே கோவை மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று குப்பைகள் தரம் பிரித்து வாங்கப்பட்டு வருகிறது. இதனை மேலும் மேம்படுத்தும் வகையில் மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் 100 சதவீதம் குப்பைகளைத் தரம் பிரித்து சேகரம் செய்ய தேவையான விரிவான செயல் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்பாக மாநகராட்சி சுகாதார அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கோவை மாநகராட்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் சேகரமாகும் குப்பைகளை குடியிருப்பு வாசிகள் தரம் பிரித்து தங்கள் சொந்த பொறுப்பில் அவர்களுடைய வளாகத்திலேயே மக்கும் குப்பைகளை பையோகேஸ் அல்லது உரம் தயாரிக்க தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த வேண்டும். மேலும், மறுசுழற்ச்சிக்கு ஏதுவான பிற கழிவுகளை தனி நபருக்கு விற்பனை செய்யவோ அல்லது மாநகராட்சியிலும் ஒப்படைக்கலாம்.

மேலும், இதர குடியிருப்புகளில் மாநகராட்சி மூலம் 2,087 குப்பை சேகரிக்கும் தள்ளு வண்டிகள் மூலம் தரம் பிரித்த குப்பைகளை சேகரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, பொதுமக்கள் தங்கள் குடியிருப்புகள் வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து மாநகராட்சி துப்புரவு பணியாளரிடம் வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.” இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, மாநகர நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், அனைத்து மண்டல உதவி ஆணையாளர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள், மாநகராட்சிப் பொறியாளர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...