திருப்பூரில் பெண்ணை தாக்கிய டி.எஸ்.பி. மீது எந்த புகாரும் வரவில்லை- தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் ரேகா ஷர்மா பேட்டி



தேசிய மகளிர் ஆணையத்தின் 'மகிளா ஜென் சுன்வைவ்' அமைப்பு நாடு முழுவதிலும் பெண்களுக்கு எதிரான வழக்குகளை விசாரித்து வருகிறது. இந்த அமைப்பு நடத்தும் விசாரணை இரண்டு நாட்கள் கோவையில் நடைபெறுகிறது. இதற்காக தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் ரேகா ஷர்மா கோவை வந்தார். அப்போது, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கடந்த 5 மாதங்களாக 'மகிளா ஜன் சுன்வைவ்' அமைப்பானது பெண்களுக்கான வழக்குகளை விசாரிக்க இந்தியா முழுவதும் மாவட்டம் வாரியாக சென்று விசாரணை நடத்துகிறது. போலீசாரால் தீா்க்க முடியாத வழக்குகளை மகிளா ஜன் சுன்வைவ் அமைப்பு ஏற்று நடத்தி வருகிறது.

மேலும், வடமாநிலங்கள் உத்திரப்பிரதேசம், பீகார், மேற்குவங்காளம் போன்ற மாநிலங்களின் குற்ற எண்ணிக்கையை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டின் குற்ற எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. தமிழக போலீசார் எங்கள் அமைப்பிற்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். சமீபத்தில் சென்னையில் விசாரணை மேற்கொண்டோம். அப்போது அங்கு 100 வழக்குகள் பதிவாகி இருந்தது. கோவையில் 40 வழக்குகள் மட்டுமே உள்ளது. 90 சதவிகித வழக்கு விசாரணை முடிவடைந்துவிட்டது.

இங்கு ஒரு பெண் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காமல் இருந்தது. இதற்கு அண்டை மாவட்டத்தை சேர்ந்த 2 இடைநிலை காவலர்கள் உறுதுணையாக இருந்தனர். தொடர்ந்து, எங்கள் அமைப்பின் சார்பில் அவர்கள் மீதும் விசாரணை எடுக்க கமிஷன் அமைத்துள்ளோம்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை எதிர்கொள்ள பெண்கள் புகார்களை அளிக்க முன்வர வேண்டும். திருப்பூரில் பெண்ணை தாக்கியதாக டி.எஸ்.பி. மீது எந்த புகாரும் எங்கள் அமைப்புக்கு வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...