கோவை மாநகர காவல்துறை (போக்குவரத்து) துணை ஆணையாராக துரை பதவியேற்பு


தமிழகம் முழுவதும் 17 ஐ.பி.எஸ் அதிகாரிகளை  இடமாற்றம் செய்து கடந்த 13-ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, கோவை மாநகரில் துணை ஆணையராக (போக்குவரத்து) பணியாற்றி வந்த சரவணன் சென்னை பெருநகர தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். 

கோவை மாநகரின் புதிய துணை ஆணையராக (போக்குவரத்து) துரை நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், இன்று காலை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்த துரை-க்கு காவல்துறை அதிகாரிகள், பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர், கோப்புகளில் கையொப்பமிட்ட அவர், கோவை மாநகரின் போக்குவரத்து துணை ஆணையராக பதவியேற்றுக்கொண்டார். 



இதை தொடர்ந்து, அவர் சிம்ப்ளி-சிட்டி க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- கோயம்புத்தூர் மாவட்டத்தை நன்கு அறிந்தவன் நான். எனது கல்லூரி படிப்பை இங்கு தான் முடித்தேன். போக்குவரத்து சம்பந்தமாக கோவை மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை உணரமுடிகிறது.  பொதுமக்களிடம் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வலியுறுத்துவது மட்டுமின்றி, கோவை மாநகரை போக்குவரத்து நெரிசல் இல்லாத மாவட்டமாக மாற்ற திட்டங்களை செயல்படுத்துவேன். திட்டங்கள் வருங்காலத்தை நோக்கி பயணிப்பதாக இருக்கும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...