நாளை துவங்குகிறது ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு

தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடக ஆகிய நான்கு மாநிலங்களில் நாளை முதல் 3 நாட்களுக்கு ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. 690 சதுர கிலோமீட்டர் கொண்ட கோவை வனக்கோட்டத்தை 24 பகுதிகளாக பிரித்து இக்கணக்கெடுப்பு நடத்தப்படுமென மாவட்ட வன அலுவலர் ராமசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு 4 மாநிலங்களிலும் நாளை துவங்கிறது.

நாளை முதல் 3 நாட்களுக்கு யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் கோவை ஆர்.எஸ்.புரம் வனக்கல்லூரி வளாகத்தில் உள்ள தமிழ்நாடு வன உயர் பயிற்சியகத்தில், யானைகள் கணக்கெடுப்பு தொடர்பான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.

அப்போது மாவட்ட வன அலுவலர் ராமசுப்பிரமணியம் யானைகள் கணக்கெடுப்பை மேற்கொள்வது குறித்து வனத்துறையினருக்கும், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினருக்கும் பயிற்சி அளித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ராமசுப்பிரமணியம், 690 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட கோவை வனக்கோட்டத்தை 24 பகுதிகளாக பிரித்து யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுமென தெரிவித்தார். முதல் நாளில் நேரடி கணக்கெடுப்பு, இரண்டாம் நாள் அறிவியல் பூர்வ கணக்கெடுப்பு, மூன்றாம் நாள் நீர்நிலை கண்காணிப்பு என 3 முறைகளில் இக்கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.

இதன் மூலம் யானைகளின் குடும்ப அமைப்பு, ஆண், பெண் யானைகள் விகிதாச்சாரம், குட்டி யானைகள் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை துல்லியமாக அறிந்து கொள்ள முடியுமெனவும், பயிற்சி வனவர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் உட்பட சுமார் 100 பேர் பங்கேற்க உள்ளதாகவும் ராமசுப்பிரமணியம் தெரிவித்தார்.

பருவ காலங்களுக்கு ஏற்ப யானைகள் இடம் பெயரும் தன்மை கொண்டதால் ஒரே நாளில் 4 மாநிலங்களிலும் கணக்கெடுப்பு நடத்தப்படுவதாகவும், இக்கணக்கெடுப்பு மூலம் யானைகளின் துல்லியமான கணக்கை அறிந்து கொள்ள முடியுமெனவும் ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் காளிதாஸ் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...