வேலைவாய்ப்பு அலுவலகமும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் இணைந்து வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் இணைந்து படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு குறுகியகால திறன் மேம்பாட்டு பயிற்சியினை இலவசமாக வழங்கி வருகிறது. பள்ளி இறுதி தேர்ச்சி, 12ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்த வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித் தொகை பெற்று வரும் மனுதாரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இத்திறன் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுவதோடு பயிற்சிக் காலம் முழுமைக்கும் தினம்தோறும் போக்குவரத்துப்படி வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்த பின்னர் தனியார் நிறுவனங்களில் மனுதாரர்களுக்கு வேலைவாய்ப்பும் பெற்றுத் தரப்படுகிறது. 

இதன் தொடர்பாக விருப்பம் உள்ள மனுதாரர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பயிற்சி பெற விரும்பும் திறன் பயிற்சி விபரங்களை அனுப்பி வைக்க வேண்டும். இதில், பயிற்சி பெறும் மனுதாரர்களுக்கு எஸ்சிவிடி சான்றிதழ் வழங்கப்படும். 

வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைத் திட்டத்தில் பயன்பெற்று வரும் பயனாளிகளுக்கென சிறப்பு திறன் பயிற்சி பதிவு முகாம் வரும் மே 31ம் தேதியன்று காலை 10.30 மணியளவில் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் நடத்தப்பட உள்ளது.

இதில் பங்கேற்று பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.வேலைவாய்ப்பு அலுவலகமும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் இணைந்து வேலைவாய்ப்பு பயிற்சி

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் இணைந்து படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு குறுகியகால திறன் மேம்பாட்டு பயிற்சியினை இலவசமாக வழங்கி வருகிறது. பள்ளி இறுதி தேர்ச்சி, 12ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்த வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித் தொகை பெற்று வரும் மனுதாரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இத்திறன் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுவதோடு பயிற்சிக் காலம் முழுமைக்கும் தினம்தோறும் போக்குவரத்துப்படி வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்த பின்னர் தனியார் நிறுவனங்களில் மனுதாரர்களுக்கு வேலைவாய்ப்பும் பெற்றுத் தரப்படுகிறது. 

இதன் தொடர்பாக விருப்பம் உள்ள மனுதாரர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பயிற்சி பெற விரும்பும் திறன் பயிற்சி விபரங்களை அனுப்பி வைக்க வேண்டும். இதில், பயிற்சி பெறும் மனுதாரர்களுக்கு எஸ்சிவிடி சான்றிதழ் வழங்கப்படும். 

வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைத் திட்டத்தில் பயன்பெற்று வரும் பயனாளிகளுக்கென சிறப்பு திறன் பயிற்சி பதிவு முகாம் வரும் மே 31ம் தேதியன்று காலை 10.30 மணியளவில் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் நடத்தப்பட உள்ளது.

இதில் பங்கேற்று பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...