சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கும்பல் சேலத்தைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.15 லட்சம் வரை மோசடி செய்திருப்பது விசாரணையில் அம்பலம்.


கோவை: ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் லட்சக்கணக்கில் ஆன்லைன் மூலம் பணம் பறித்து வந்த இருவரை l கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து தெரிவித்த போலீசார், கோவையில் வசிக்கும் வடமாநில வியாபாரிகளின் செல்போன் எண்களை பெற்று, போலீசில் இருந்து பேசுவதாக கூறி மர்ம நபர்கள் தொடர்புகொண்டு வந்துள்ளனர்.

அவர்கள், "நீங்கள் ஆன்லைனில் ஆபாச வீடியோக்களை பார்த்துள்ளீர்கள். உங்களை கைது செய்து சிறையில் அடைப்பதுடன், உங்கள் புகைப்படத்தை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடுவோம். இதிலிருந்து தப்பிக்க வேண்டுமெனில் நாங்கள் கூறும் வங்கி கணக்கிற்கு உடனடியாக பணம் அனுப்ப வேண்டும்" என மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் அச்சமடைந்த பலர் அவர்கள் குறிப்பிட்ட வங்கி கணக்குகளுக்கு ஆன்லைன் மூலம் பணம் அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பல்வேறு புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், வடவள்ளி பி.என்.புதூரைச் சேர்ந்த பின்னி மற்றும் சரவணம்பட்டியைச் சேர்ந்த கிஷோர் குமார் ஆகியோர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும், கைது செய்யப்பட்ட கிஷோர் குமார் மீது கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஏற்கனவே நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த கும்பல் சேலத்தைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.15 லட்சம் வரை மோசடி செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறினர்.

இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களை அடையாளம் காணும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...