முதல் தலைமுறை தொழில் முனைவோர் புதிய தொழில்கள் துவங்க மானியத்துடன் கூடிய கடனுதவி- கோவை ஆட்சியர்

தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ள நீட்ஸ் திட்டத்தின் கீழ் படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோர் 2017-18ம் நிதியாண்டில் தொழில் துவங்க முன்வருமாறு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் அழைப்பு விடுத்துள்ளார்.

இத்திட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு, தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்பட்டு தகுதி வாய்ந்த தொழில் திட்டங்களுக்கு நிதி நிறுவனங்களில் நிதியுதவி பெற்றுத்தரப்படும். இத்திட்டத்தினை மாவட்ட தொழில் மையமும், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகமும் இணைந்து செயல்படுத்துகின்றன.

இத்திட்டத்தின்கீழ் ரூ.5 லட்சம் முதல் 1 கோடி வரை திட்ட மதிப்பீட்டு தொகை உள்ள உற்பத்தி மற்றும் சேவைத்தொழில்களை துவங்கலாம். இதற்கென தமிழக அரசு 25 சதவீதம் மானியமும், 3 சதவீதம் பின்முறை வட்டி மானியமும் வழங்குகிறது.

புதியதாக துவங்கப்படும் தொழில்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். அரசு திட்டங்களின்கீழ் ஏற்கனவே, மானியத்துடன் கூடிய கடன் பெற்றவர்கள் இத்திட்டத்தின்கீழ் பயன்பெற இயலாது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் வங்கிகள் மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் ஆகிய நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெற்று திருப்பி செலுத்தாதவராக இருத்தல் கூடாது.

இத்திட்டத்தின் அரசாணை, விண்ணப்பம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் மாவட்ட தொழில் மையத்தின் www.dickovai.com என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இத்திட்ட பயனாளிகள், மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு ஒரு மாத மேலாண் பயிற்சி ரூ.3 ஆயிரம் உதவித் தொகையுடன் அளிக்கப்படும்.

இத்திட்டத்தின்கீழ் 2016-17 கடந்த நிதியாண்டில் 83 நபர்களுக்கு ரூ.14 கோடியே 38 லட்சத்து மானியத்துடன் கூடிய ரூ.45 கோடியே 61 லட்சத்து கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. தென்னை நார் கழிவுக் கட்டிகள், மசாலா பவுடர், காலணி, உணவு எண்ணெய், அட்டை பெட்டிகள், ஆயுத்த ஆடை, சாக்லேட், கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் டெவலப்மெண்ட், சி.என்.சி, லேத், ஷீட் மெட்டல் பேப்ரிகேசன், பிளாஸ்டிக் இன்ஜக்ஷன் மோல்டிங், பெட் பாட்டில், பெயிண்ட், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், பி.வி.சி. பைப், பிவிசி கதவு மற்றும் ஜன்னல்கள், செல்லோ டேப், தோல் பொருட்கள் போன்ற உற்பத்தி தொழில்கள் மற்றும் அழகு நிலையம், உடற்பயிற்சி நிலையம், இயன்முறை மருத்துவம், கேட்டரிங் சர்வீஸ், நான் டெஸ்ட்ராக்டிவ் டெஸ்டிங் உள்ளிட்ட சேவைத் தொழில்களும் இத்திட்டத்தின் மூலம் துவங்கப்பட்டுள்ளன.

இந்த நிதியாண்டு 2017-18ம் கோவை மாவட்டத்திற்கு ரூ.480 லட்சம் மானியத் தொகை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, தகுதியும், ஆர்வமும் உள்ள முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து  பயன்பெறுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் அழைப்பு விடுத்துள்ளார்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...