மதுபானக் கடை மற்றும் அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி தொழிற்சங்கங்கள் சார்பில் ஆட்சியரிடம் மனு

மதுபானக் கடை மற்றும் அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து மனு அளிக்க வந்த அண்ணா தொழிற்சங்கம், எல்.பி.எப், பாட்டாளி தொழிற்சங்கம், சிஐடியூ உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் கூறுகையில்,

உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை அடுத்து தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டருக்குள் செயல்பட்டு வந்த மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன.

இதனைத்தொடர்ந்து, மூடப்பட்ட இந்த டாஸ்மாக் கடைகளை குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் திறக்க மதுபானக் கடை நிர்வாகமும், அரசு நிர்வாகமும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பொதுமக்கள் ஆங்காங்கே பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சில இடங்களில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கடையின் பூட்டை உடைத்தும், மது பாட்டில்களை உடைத்தும் போராட்டம் செய்து வருகின்றனர்.

கோவை உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறு குடியிருப்பு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடும் போது, அங்கு பணிபுரிவோர் மீதும் தாக்குதல்களை நடத்துகின்றனர். இதனால் பாதிப்படைந்த மதுபானக் கடை ஊழியர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்ட நிர்வாகம் ஒதுக்கீடு செய்த இடத்திலேயே அரசு மதுபானக் கடைகள் இயங்கி வரும் நிலையில் மதுபானக் கடை மற்றும் ஊழியர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி அண்ணா தொழிற்சங்கம், எல்.பி.எப், பாட்டாளி தொழிற்சங்கம், சிஐடியூ உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து டாஸ்மாக் கடையில் பணிபுரியும் ஊழியர்கள் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...