கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய சாட்சிகள் என்பதால் அரசு வேலை வழங்குவது வழக்கு விசாரணையை பாதிக்கக்கூடும் என்றும் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

கோவை: கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை த.வெ.க. தலைவர் விஜய் ரத்து செய்ய வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் க. கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
2025-ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நடைபெற்ற விஜயின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தனர். அந்த உயிரிழப்புக்கான காரணம் என்ன என்பது இதுவரை தெளிவாகவில்லை. இது திட்டமிட்டு நடந்த செயலா அல்லது விபத்தா என்பதற்கும் இதுவரை விடை கிடைக்கவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக கரூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும், உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவரின் கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது. ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட பலர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதுடன், உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரும் முக்கிய சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கவும், அதற்கான ஆணையை விஜயே நேரடியாக வழங்கவும் நாளை (ஜூலை 10) கரூருக்கு செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே த.வெ.க. சார்பில் உதவித்தொகையும் வழங்கப்பட்டுள்ளது.
முக்கிய சாட்சிகளாக உள்ள அந்த 41 பேரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டால், அவர்களால் நேர்மையான சாட்சியங்களை வழங்க முடியாது. அவர்கள் பிறழ் சாட்சிகளாக மாறிவிடலாம். அதனால் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் போவதுடன், 41 பேரின் மரணத்திற்கு நீதி கிடைக்காமலும் போய்விடும்.
"அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" என்றும், அரசு வேலை வழங்குவது நீதிமன்ற விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ள டாக்டர் க. கிருஷ்ணசாமி, கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை முதல்வர் விஜய் ரத்து செய்ய வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி சார்பில் வலியுறுத்தியுள்ளார்.

Newsletter

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் ஆய்வு; நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் சரத்குமார்

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் ஆய்வு மேற்கொண்டு, முன்னாள் ப...

வார்டு வளர்ச்சிப் பணிகள் புறக்கணிப்பு குற்றச்சாட்டு; கோவையில் தி.மு.க கவுன்சிலர் தர்ணா

கோவை அருகே தென்கரை பேரூராட்சி மன்றக் கூட்டத்தின் போது, தனது வார்டில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் புறக்கணிக...

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...