கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி தூய்மை பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் ஆய்வு செய்து அறிவுறுத்தல் வழங்கினார். தரமான பணிகள் உறுதி செய்யப்பட்டன.


Coimbatore: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் வார்டு எண் 27ல் பல்வேறு மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் ஆய்வு செய்து உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.




பீளமேடு சூர்யா கார்டன் பகுதியில் புதிய தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுமக்களுக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாமல், தரமான முறையில் சாலை அமைக்க ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது வார்டு உதவி பொறியாளர் குமார் உடனிருந்தார்.






அதேபோல், வார்டு எண் 27ல் உள்ள பீளமேடு துரைசாமி நாயுடு லேஅவுட் பகுதியில் மாஸ் கிளீனிங் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சாலையோர செடிகள், குப்பைகள் மற்றும் சாக்கடைகளை முழுமையாக அகற்றி சுத்தம் செய்ய தூய்மை பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதன் மூலம் பகுதியை தூய்மையாக பராமரிக்கும் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.






சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பீளமேடு பாரதி காலனி பகுதியில் செயல்படும் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மையத்தை கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்கள் வருகைப் பதிவேடு மற்றும் குழந்தைகள் தடுப்பூசி பதிவேடுகளை விரிவாக ஆய்வு செய்தார். ஆய்வின்போது மருத்துவர் மற்றும் செவிலியர்கள் உடனிருந்து தேவையான விளக்கங்களை வழங்கினர்.






மேலும், பீளமேடு ஸ்ரீ கோபால் நாயுடு மேல்நிலைப்பள்ளி முன்பகுதியில் மரக்குப்பைகள் அகற்றப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து உடனடியாக சுத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டது. பணிகளை நேரில் பார்வையிட்ட கவுன்சிலர் அம்பிகா தனபால், பள்ளி அமைந்துள்ள பகுதி என்பதால் குப்பைகள் மற்றும் மரக்குப்பைகளை தினசரி அகற்றுமாறு வார்டு சூப்பர்வைசருக்கு உறுதியான அறிவுறுத்தல் வழங்கினார்.






இவ்வாறு வார்டு 27ல் மேற்கொள்ளப்படும் பல்வேறு மேம்பாட்டு மற்றும் தூய்மை பணிகள் பொதுமக்களின் நல்வாழ்வுக்காக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...