கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்படும் வடமாநில வாலிபரை இளைஞர்கள் கையும் களவுமாகப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பிடிபட்டதும் மன்னிப்பு கேட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.


Coimbatore: கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ஆண்கள் தங்கும் விடுதியில், நேற்று அதிகாலை திருட முயன்றதாகக் கூறப்படும் வடமாநில வாலிபர் ஒருவரை விடுதியில் தங்கியிருந்த இளைஞர்கள் கையும் களவுமாகப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில், விடுதியின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்றின் பூட்டை உடைத்து திருட அந்த நபர் நீண்ட நேரம் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் வாகனத்தின் பூட்டை உடைக்க முடியாமல் தவித்த நிலையில், இரவு பணி முடித்து வந்த இரண்டு இளைஞர்களைக் கண்டதும் அங்கிருந்து அமைதியாக விலகிச் சென்றுள்ளார்.

இதையடுத்து, சிறிது நேரத்தில் மீண்டும் வந்த அவர், விடுதியின் கேட்டைத் திறந்து உள்ளே நுழைந்துள்ளார். அங்கு வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் செல்போன்களைத் திருட முயன்றபோது, எதிரே உள்ள மற்றொரு விடுதியில் தங்கியிருந்த இளைஞர்கள் அவரைக் கண்டு சந்தேகமடைந்து விரட்டிச் சென்று கையும் களவுமாகப் பிடித்தனர்.

நள்ளிரவில் முன்பின் தெரியாத நபர் விடுதிக்குள் சுற்றித் திரிந்ததைப் பார்த்த இளைஞர்கள், அவரைச் சுற்றி வளைத்து, “யார் நீ? இங்கே என்ன செய்கிறாய்?” என்று விசாரித்தனர். தப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டதை உணர்ந்த அந்த வாலிபர், இளைஞர்களின் காலில் விழுந்து, “என்னை விட்டுவிடுங்கள்… தெரியாமல் செய்து விட்டேன்” என்று இந்தி மற்றும் அரைகுறை தமிழில் கைகளை கூப்பி அழுது மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் அவரது நாடகத்தை நம்பாத இளைஞர்கள், உடனடியாக பெரியநாயக்கன்பாளையம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் அந்த வாலிபரை காவலில் எடுத்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

கைது செய்யப்பட்ட அந்த நபருக்கு, அந்தப் பகுதியில் உள்ள மற்ற விடுதிகள் மற்றும் வீடுகளில் நடைபெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் முழுவதும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.

Newsletter

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...