கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச் சென்ற 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகளின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


கோவை: தென்மேற்கு பருவமழையால் மீண்டும் பசுமை போர்த்தியுள்ள கோவை மாவட்ட வனப்பகுதிகளில், காட்டு யானைகள் தங்களது இயற்கை வாழ்விடங்களுக்கு திரும்பத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், மாங்கரை வனச்சரகத்தில் குட்டிகளுடன் அணிவகுத்துச் சென்ற 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகளின் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த சில மாதங்களாக நிலவிய கடும் கோடை வெப்பம் காரணமாக காடுகளுக்குள் உணவு மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால், காட்டு யானைகள் அடிக்கடி வனப்பகுதிகளை விட்டு வெளியேறி, சுற்றுவட்டார கிராமங்களுக்குள் புகுந்து விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளுக்கு சேதம் விளைவித்து வந்தன.

ஆனால், கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததையடுத்து மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் மீண்டும் பசுமையடைந்துள்ளன. வனப்பகுதிகளில் நீர்நிலைகள் நிரம்பியதால், யானைகள் மீண்டும் தங்களது இயற்கை வாழ்விடங்களுக்குத் திரும்பி வருகின்றன.



இதன் ஒரு பகுதியாக, தமிழக–கேரள எல்லையில் உள்ள தடாகம் அருகேயுள்ள மாங்கரை வனச்சரகத்தில், 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கொண்ட கூட்டம் ஒன்று உலா வந்தது. கூட்டத்தில் இருந்த பெண் யானைகள், குட்டி யானைகளை தங்களுக்கு நடுவில் பாதுகாப்பாக வைத்தபடி ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்துச் சென்றன.

இந்த மனம் கவரும் காட்சியை அப்பகுதியில் இருந்த இயற்கை ஆர்வலர் ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். இயற்கை சூழலில் குட்டி யானைகளை அரவணைத்தபடி ஒழுங்காக நகரும் யானைக் கூட்டத்தின் இந்த அரிய வீடியோ தற்போது வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...