கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர்ஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் 1.435 கிலோ கஞ்சா மற்றும் ரூ.4,500 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவை மத்திய ரயில் நிலையம் முன்பு உள்ள விநாயகர் கோவில் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்ததை அடுத்து, ரேஸ் கோர்ஸ் போலீசார் சோதனை நடத்தி பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை கைது செய்தனர்.

ரேஸ் கோர்ஸ் போலீசாருக்கு கோவை மத்திய ரயில் நிலையம் முன்பு உள்ள விநாயகர் கோவில் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், சப்-இன்ஸ்பெக்டர் அஜய் சர்மா தலைமையிலான போலீசார் குழு நேற்று காலை அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையின் போது, சந்தேகப்படும் வகையில் பையுடன் நின்றிருந்த ஒரு இளைஞரை போலீசார் சோதனைக்கு உட்படுத்தினர். அவரது பையில் விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.

போலீசாரின் விசாரணையில், கைது செய்யப்பட்டவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (30) என்பதும், தற்போது பொள்ளாச்சி குளக்கப்பாளையம் பகுதியில் தங்கி இருந்ததும் தெரியவந்தது. போலீசார் அவரிடம் இருந்து 1.435 கிலோ எடை கொண்ட கஞ்சா மற்றும் ரூ.4,500 ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...