கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவை ரத்தினபுரி சம்பத் வீதியைச் சேர்ந்த ஜெயக்குமார் (74), நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் 100 அடி சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, நெல்லை லாலா ஸ்வீட்ஸ் கடை அருகே சென்றபோது, பின்னால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கதிரேசன் (59) ஓட்டி வந்த அரசு பேருந்து, அவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் ஜெயக்குமார் சாலையில் தூக்கி வீசப்பட்டு, தலையின் பின்புறம் மற்றும் நெஞ்சுப் பகுதியில் பலத்த காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பாக கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்போது, நெல்லை லாலா ஸ்வீட்ஸ் கடை அருகே சென்றபோது, பின்னால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கதிரேசன் (59) ஓட்டி வந்த அரசு பேருந்து, அவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் ஜெயக்குமார் சாலையில் தூக்கி வீசப்பட்டு, தலையின் பின்புறம் மற்றும் நெஞ்சுப் பகுதியில் பலத்த காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பாக கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.