மேட்டுப்பாளையத்தில் ஓடும் பேருந்தில் இளம்பெண் குத்திக்கொலை - கணவர் வெறிச்செயல்


மேட்டுப்பாளையம், சங்கர் நகரில் வசிக்கும் ரவி என்பவரது மகன் உதயா (20). இவரது மனைவி ஆனந்தி (18). இருவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இதனிடையே, கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக ஆனந்தி வெள்ளிக்குப்பம் பாளையத்தில் உள்ள தனது தாயுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், இன்று ஆனந்தி தலைவலிக்கு சிகிச்சை பெற மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு 14 எண் கொண்ட பேருந்தில் மேட்டுப்பாளையம் வந்துகொண்டிருந்தார்.

அப்போது, தாலூகா அலுவலகம் அருகே பேருந்து வந்துகொண்டிருந்த போது உதயா தனது மனைவி ஆனந்தியை சமாதானம் செய்து சேர்ந்து வாழ அழைத்துள்ளார். இதற்கு ஆனந்தி மறுத்த நிலையில், ஆத்திரமடைந்த உதயா, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆனந்தியின் மார்பில் குத்திவிட்டு உதயா தப்பி ஓடியுள்ளார். 

இதனைத்தொடர்ந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஆனந்தியை மீட்ட அக்கம்பக்கத்தினர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி அனந்தி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மேட்டுப்பாளையம் காவல்துறையினர் தப்பி ஓடிய உதயாவை தேடிவருகின்றனர்.

மேட்டுப்பாளையத்தில் ஓடும் பேருந்தில் மனைவியை கணவன் குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...