ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம் வென்றது. கோவையைச் சேர்ந்த வீராங்கனை ஹாசினி மற்றும் வீரர் பிரனேஸ் ஆகியோர் ‘டீம் ரிலே’ போட்டியில் அணியின் சார்பில் விளையாடி பதக்க வெற்றியில் முக்கிய பங்காற்றினர்.


கோவை: உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்று வரும் ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில், தமிழ்நாடு அணியைச் சேர்ந்த கோவை வீரர், வீராங்கனை வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள இவர்கள், சர்வதேச அரங்கில் தமிழகத்தின் விளையாட்டு திறமையை நிரூபித்துள்ளனர்.


ஜூன் 21 முதல் 28 வரை உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கண்ட் நகரில் ‘ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026’ போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் இந்தியா உட்பட 21 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். பல்வேறு பிரிவுகளில் கடுமையான போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், ‘டீம் ரிலே’ பிரிவில் தமிழ்நாடு அணி சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியது.


நேற்று நடைபெற்ற டீம் ரிலே போட்டியில் இந்தியா சார்பில் களமிறங்கிய தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம் வென்று பெருமை சேர்த்தது. இதில், கோவையைச் சேர்ந்த வீராங்கனை ஹாசினி மற்றும் வீரர் பிரனேஸ் ஆகியோர் அணியின் சார்பில் விளையாடி பதக்க வெற்றியில் முக்கிய பங்காற்றினர். இருவரும் சிறப்பான ஒருங்கிணைப்புடன் போட்டியிட்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.




வீராங்கனை ஹாசினி இதுவரை 15 தேசிய பதக்கங்களையும், 2 சர்வதேச பதக்கங்களையும் வென்று சாதனை படைத்துள்ளார். இளம் வயதிலேயே மவுண்டன் பைக்கில் தனது திறமையை வெளிப்படுத்தி வரும் இவர், தொடர்ந்து சிறப்பான செயல்திறனை காட்டி வருகிறார். அதேபோல் வீரர் பிரனேஸ் 9 தேசிய பதக்கங்களையும், 4 சர்வதேச பதக்கங்களையும் பெற்று தனது திறமையை நிரூபித்துள்ளார். இருவரும் கடந்த பல ஆண்டுகளாக மவுண்டன் பைக்கில் தொடர்ச்சியான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.


தமிழ்நாடு அரசின் STAD (Sports Development Authority of Tamil Nadu) பிரிவு வீரர்களுக்கு தேவையான பயணச் செலவுகள், உணவு, தங்குமிட வசதிகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளை செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது.




வெண்கலப் பதக்கம் வென்ற ஹாசினி மற்றும் ப்ரனேஸுக்கு தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேஷன், கோவை சைக்கிளிங் அசோசியேஷன், பெற்றோர், பயிற்சியாளர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...