50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மீட்ட போலீசார், உரியவரிடம் ஒப்படைத்தனர்.


கோவை: கோவையை சேர்ந்த டி. கிருஷ்ணன், பி.என். புதூர் பகுதியைச் சேர்ந்தவர். இவர் கடந்த ஜூன் 10-ஆம் தேதி ஆர்.எஸ்.புரம் டி.பி. சாலையில் உள்ள கனரா வங்கி கிளையில் இருந்து ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்துள்ளார்.

அப்போது, தவறுதலாக ரூ.40 ஆயிரம் கீழே விழுந்துள்ளது. இதனை அருகில் இருந்த ஒருவர் எடுத்து தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், பி-2 ஆர்.எஸ்.புரம் புலனாய்வு பிரிவு காவல் நிலைய சரக உதவி ஆணையர் செல்லதுரை உத்தரவின்படி, காவல் ஆய்வாளர் காமாட்சிநாதன் வழிகாட்டுதலில், சிறப்பு சார்பு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தலைமை காவலர்கள் சிந்தன், நாகூர் கனி மற்றும் இரண்டாம் நிலை காவலர் ரஞ்சித் குமார் ஆகியோர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

விசாரணையின் போது சம்பவ இடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு, பணத்தை எடுத்துச் சென்ற நபரின் இருப்பிடம் கண்டறியப்பட்டது.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த நபர் இரண்டு நாட்கள் வெளியூரில் இருந்ததும், பின்னர் தாமாக முன்வந்து பணத்தை ஒப்படைக்க தயாராக இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அவர் எடுத்துச் சென்ற ரூ.40 ஆயிரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, ஆர்.எஸ்.புரம் சரக உதவி ஆணையர் முன்னிலையில் உரியவரான கிருஷ்ணனிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...