வால்பாறையில் காட்டுயானை தாக்கி காவலாளி பலி



வால்பாறை அடுத்துள்ள முருகாளி எஸ்டேட்டில் காவலாளியாக பணிபுரிந்து வந்தவர் பாபு (50).  இவர் வழக்கம் போல் நேற்று இரவு எஸ்டேட் மருத்துவமனை அருகாமையில் உள்ள மருத்துவர் குடியிருப்பில் காவல் பணியில் இருந்தபோது நள்ளிரவில் ஒற்றை யானை ஒன்று மெயின் கேட் வழியாக உள்ளே நுழைந்து பாபுவை தாக்கியுள்ளது. 



இதனிடையே, அங்கிருந்த மருத்துவர் யானையின் அழறல் சத்தத்தைக் கேட்டு பயத்தில் வீட்டின் உள்ளேயே இருந்துள்ளார். தொடர்ந்து, மருத்துவர் கைபேசியில் அழைப்பு விடுத்த போது பாபுவின் கைபேசி செயல் இழந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, மருத்துவர் அதிகாலையில் வெளியே வந்து பார்த்த போது காலாளி பாபுவைக் காணவில்லை. வீட்டியின் அருகாமையில் இரத்தக்கறை இருப்பதை கண்டவுடன் பொதுமக்கள் உதவியுடன் தேடி பார்த்தபோது அருகாமையில் உள்ள பல்லத்தில் பாபு உடல் முழுவதும் பலத்த காயத்துடன் இறந்து கிடந்துள்ளார்.



இதுகுறித்து காவல்துறைக்கும், வனத்துறைக்கும் தகவல் கொடுக்கபட்டதைத் தொடர்ந்து, ஆய்வாளர் சுப்பிரமணி தலைமையில் காவல்துறையினர் பாபுவின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

மேலும், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, முருகாளி எஸ்டேட் தொழிலாளர்கள் வனவிலங்குகளிடம் இருந்து தங்கள் உடமைக்கும், உயிருக்கும் நிரந்தரமான பாதுகாப்பு வழங்க எஸ்டேட் நிறுவாகமும், அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...