இந்து மதத்தையும், பெண்கள் சமூகத்தையும் இழிவாக பேசும் கிருத்துவ போதகர் மீது நடவடிக்கை கோரி அகோரிகள் போராட்டம்

கோவையில் இந்து மதத்தையும், இந்து மத பெண்களையும், காசி அகோரிகளையும் இழிவுப்படுத்தி கிருத்துவ போதகர் பேசுவதாகவும், இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள புத்தகத்தை தடை செய்யக்கோரியும், கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று உடுக்கை அடித்தும், சங்கு ஊதியும் அகோரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த கிறித்துவ மத போதகர் ஆண்டர்சன். இவர், வெளியிட்டு வரும் யெகோவா-யீரே-ன் குமுறலின் சத்தம் என்ற ஜெப குறிப்பு புத்தகங்களில் தொடர்ந்து இந்து மத பெண்களை இழிவுப்படுத்தி வந்ததாகவும், காசி அகோரிகளை பிணம் திண்பவர்கள் என இழிவுப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் குமுறலின் சத்தம் புத்தகத்தை தடை செய்யவும், எழுதிய ஆண்டர்சனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கீழ் கைது செய்யக்கோரியும், காசி அகோரிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர்.



அப்போது சங்கு ஊதியும், உடுக்கை அடித்தும் போராட்டத்தில் ஈடுபட்ட அகோரிகள், இந்து மத பெண்களையும், அகோரிகளை பிணம் திண்ணும் பேய்கள் என இழிவுபடுத்திய புத்தகத்தை தடை செய்ய வேண்டுமெனவும், அப்புத்தகத்தை வெளியிட்டவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்திலும், பெண் வடுகொடுமை தடுப்பு சட்டத்திலும் கைது செய்ய வேண்டுமெனவும் தெரிவித்தனர்.

மேலும், நடவடிக்கை எடுக்கத்தவறினால் காசியில் இருந்து நிர்வாண அகோரிகளை வரவழைத்து போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்த போராட்டம் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...