ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை மற்றும் ரூ.1.03 கோடி அபராதம் விதித்து கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


கோவை: ஈமு கோழி பண்ணை நடத்தி முதலீட்டாளர்களிடம் கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்த வழக்கில், இருவருக்கு தலா 10 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.1 கோடியே 3 லட்சத்து 80 ஆயிரம் அபராதமும் விதித்து கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே பெரிய மணலி பகுதியில், கடந்த 2012-ஆம் ஆண்டு "ஆதவன்" என்ற பெயரில் ஈமு கோழி பண்ணை செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தை சந்திரசேகரன் மற்றும் சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடத்தி வந்தனர். முதலீட்டாளர்களை கவரும் வகையில், ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால் 6 ஈமு கோழிகள் வழங்கப்படுவதுடன், 24 மாதங்களுக்கு மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் மற்றும் 4 கிராம் தங்கம் வழங்கப்படும் என பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த வாக்குறுதிகளை நம்பி நூற்றுக்கணக்கானோர் முதலீடு செய்த நிலையில், முதலீட்டாளர்களிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்ட பின்னர் வாக்குறுதியின்படி தொகை வழங்கப்படவில்லை என்ற புகார் எழுந்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், 115 பேரிடம் இருந்து ரூ.2 கோடியே 37 லட்சத்து 98 ஆயிரம் மோசடி செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதன் அடிப்படையில், பண்ணை உரிமையாளர்களான சந்திரசேகரன், சோமசுந்தரம், கணக்கர் அமுதா மற்றும் பங்குதாரர்களான ராமகிருஷ்ணன், ஆனந்தன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.



இந்த வழக்கு கோவை டான்பிட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணையில் நீதிபதி செந்தில்குமார் தீர்ப்பளித்தார். அதன்படி, சந்திரசேகரன் மற்றும் சோமசுந்தரம் ஆகியோருக்கு தலா 10 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.1 கோடியே 3 லட்சத்து 80 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. வழக்கில் தொடர்புடைய மற்ற மூவரும் விடுவிக்கப்பட்டனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...