குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக்கு தீர்வு காண வணிகவரி மற்றும் MSME அமைச்சர்களுக்கு FOCIA கோரிக்கை மனு அனுப்பியுள்ளது.


கோவை: குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகளை நீக்கவும், தொழில் அமைப்புகளின் பதிவு மற்றும் புதுப்பிப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் கோரி, கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு (FOCIA) சார்பில் தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை (MSME) அமைச்சர் மதன் ராஜா ஆகியோருக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

FOCIA ஒருங்கிணைப்பாளர்கள் ஜேம்ஸ், சுருளிவேல் மற்றும் சிவசண்முககுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழில் சார்ந்த சங்கங்கள் மற்றும் கூட்டுநிறுவனங்களின் (Partnership Firms) பதிவுகளை புதுப்பிப்பதில் பதிவு அலுவலகங்களில் பல்வேறு சிக்கல்கள் நிலவுவதாக தெரிவித்துள்ளனர். ஆன்லைனில் ஆவணங்களை பதிவேற்றுமாறு அறிவுறுத்தப்பட்டாலும், பின்னர் அதே ஆவணங்களை நேரில் சமர்ப்பிக்குமாறு கூறப்படுவதாகவும், அவ்வாறு சமர்ப்பித்த பின்னரும் பதிவுகள் மாதக்கணக்கில் நிலுவையில் வைக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், ஆவணங்களில் குறைபாடுகள் இருந்தால் அதுகுறித்து தொலைபேசி, குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலம் தகவல் வழங்கப்படுவதில்லை என்றும், நேரில் சென்று விசாரித்தால் மட்டுமே விளக்கம் அளிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். சில பதிவுகள் மென்பொருள் கோளாறுகளால் காணப்படுவதில்லை என்றும், அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டிருந்தாலும் பல ஆண்டுகளாக பதிவு புதுப்பிக்கப்படவில்லை என கணினியில் காட்டப்படுவதாகவும் கூறியுள்ளனர்.

எனவே, நீண்டகாலமாக செயல்பட்டு வரும் தொழில் அமைப்புகளின் பதிவுகளை உடனடியாக புதுப்பித்து வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பதிவுத்துறை அமைச்சரிடம் FOCIA கோரிக்கை விடுத்துள்ளது.

அதேபோல், MSME துறை அமைச்சர் மதன் ராஜாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், புதிய இயந்திரங்கள் வாங்கும் தொழில் முனைவோருக்கு 25 முதல் 35 சதவீதம் வரை மானியம் வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், மானியம் பெறுவதற்கான சில நிபந்தனைகள் உண்மையான குறுந்தொழில் முனைவோருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக FOCIA தெரிவித்துள்ளது.

குறிப்பாக, புதிய இயந்திரம் வாங்கிய பின்னர் மூன்று மாதங்களுக்குள் உற்பத்தி திறனை 25 சதவீதம் அதிகரித்துக் காட்டினால் மட்டுமே மானியம் வழங்கப்படும் என்ற நிபந்தனையால் பல விண்ணப்பங்கள் மாவட்ட தொழில் மையங்களால் நிராகரிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. ஜாப் ஆர்டர் அடிப்படையில் செயல்படும் குறுந்தொழில்களுக்கு ஆண்டு முழுவதும் ஒரே அளவில் ஆர்டர்கள் கிடைப்பதில்லை என்பதால், உற்பத்தி அதிகரிப்பு தொடர்பான நிபந்தனையை நீக்கி, புதிய இயந்திரங்கள் வாங்கும் குறுந்தொழில் முனைவோருக்கு மானியம் பெற வழிவகை செய்ய வேண்டும் என அமைச்சர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக FOCIA தெரிவித்துள்ளது.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...