வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்பினர் சேர்க்கை, இயக்க வளர்ச்சி மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்து விவாதித்தனர்.

Coimbatore:

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே வி தி லீடர் இயக்கத்தின் உள்ளரங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள மாறுவோம் மாற்றுவோம் இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் எதிர்கால செயல்திட்டங்கள் தொடர்பாக, கூடலூர் கவுண்டம்பாளையத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



கூட்டத்திற்கு பாலாஜி உத்தம ராமசாமி தலைமை வகித்தார். பாஜகவின் முன்னாள் மாவட்டத் தலைவர் சங்கீதா முன்னிலை வகித்தார். சுபாஷ் சந்திரபோஸ் வரவேற்புரை வழங்கினார்.



கூட்டத்தில் பேசிய பாலாஜி உத்தம ராமசாமி, புதிய இயக்கத்திற்கான உறுப்பினர் சேர்க்கை பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், சமூக வலைதளங்களில் தனிநபர் தாக்குதல்களை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், பாஜகவிற்கு எதிரான நிலைப்பாட்டை கடைப்பிடிக்கக் கூடாது என்றும், பொதுமக்களை நேரில் சந்தித்து இயக்கத்தின் நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகளை எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.



இந்தக் கூட்டத்தில் பாஜகவின் முன்னாள் மாவட்டப் பொருளாளர் பிரபு, முன்னாள் செயலாளர் சாந்தி, பிரவீன், விஜயகுமார், மாரிசாமி, எல்.ஐ.சி. பாலு, கூடலூர் நகராட்சிக் கவுன்சிலர் கல்யாணசுந்தரம், கிருபாகரன், வீரபாண்டி சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும், பெரியநாயக்கன்பாளையம், கூடலூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளைச் சேர்ந்த முன்னாள் மண்டலத் தலைவர்கள் மகேந்திரன், மகேந்திரராஜ், சரவணகுமார் உள்ளிட்ட பலரும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...