சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இலவச தங்குமிடம் மற்றும் உணவு வசதியுடன் ஜூலை 15 வரை விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.


Coimbatore:

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மசக்காளிப்பாளையம் மற்றும் சுந்தராபுரம் பகுதிகளில் செயல்பட்டு வரும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர்வதற்கான தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய இறுதி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் சேர தகுதியுடையவர்கள். விடுதிகளில் தங்கும் வசதி மற்றும் மூன்று வேளை உணவு உள்ளிட்ட வசதிகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

சேர்க்கைக்கான தகுதிகளின்படி, பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்தை தாண்டக்கூடாது. மாணவர்களின் இருப்பிடத்திலிருந்து கல்வி நிலையம் குறைந்தது 8 கிலோமீட்டருக்கு மேல் தொலைவில் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியர்களுக்கு பொருந்தாது.

தகுதியுடைய மாணவ, மாணவியர்கள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்கள் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்களிடமோ அல்லது மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்திலோ 15.07.2026-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் போது சாதி மற்றும் வருமானச் சான்றிதழ்களை சமர்ப்பிக்க தேவையில்லை. விடுதியில் சேரும் போது மட்டும் அவற்றை வழங்கினால் போதுமானது.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு சிறுபான்மையினர் நல விடுதியிலும் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியாக 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அரசின் இந்த நலத்திட்ட சலுகைகளை பயன்படுத்தி தகுதியுடைய கல்லூரி மாணவ, மாணவியர்கள் பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன் குமார் கிரியப்பனார் தெரிவித்துள்ளார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...