தங்க விலை உயர்வு: வரிச்சட்ட மாற்றம் கோரி கோவை நகை உற்பத்தியாளர்கள்

தங்க விலை உயர்வால் மூலதன நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த கோயம்புத்தூர் நகை உற்பத்தியாளர் சங்கம், வரிச்சட்ட மாற்றங்கள் மற்றும் பல்வேறு சலுகைகளை வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை அறிக்கை தயாரித்துள்ளது.

Coimbatore:

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் குறு, சிறு மற்றும் நடுத்தர நகை உற்பத்தி நிறுவனங்கள் கடுமையான மூலதன நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக கோயம்புத்தூர் நகை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சங்க நிர்வாகிகள் பங்கேற்று, தங்க விலை உயர்வால் நகை உற்பத்தித் துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் மத்திய அரசிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் குறித்து விளக்கமளித்தனர்.

நிர்வாகிகள் கூறுகையில், எதிர்பாராத வகையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதால் நகை உற்பத்தியாளர்கள் மூலதன பற்றாக்குறை மற்றும் நிதிச் சுமையை சந்தித்து வருகின்றனர். கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு உயர்வுக்கும் வரி விதிக்கப்படுவது தொழில்துறைக்கு கூடுதல் சுமையாக இருப்பதாக தெரிவித்தனர்.

இதனை கருத்தில் கொண்டு, மாற்றீடு முறையை அறிமுகப்படுத்துதல், உள்நாட்டு விற்பனைக்கான ஏற்றுமதி விலைப்பட்டியல் முறையை அமல்படுத்துதல், கையிருப்பு மதிப்பு உயர்வை தனி கையிருப்பு கணக்கில் வரவு வைக்க அனுமதி வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

மேலும், ICDS விதிகளில் சிறப்பு சலுகைகள் வழங்குதல், குறு மற்றும் சிறு நகை உற்பத்தியாளர்களுக்கு ஊக அடிப்படையிலான வரிவிதிப்பு முறையை அறிமுகப்படுத்துதல் மற்றும் சரக்கு மதிப்பீட்டிற்கு LIFO முறையை அனுமதித்தல் போன்ற பரிந்துரைகளும் இடம்பெற்றுள்ளன.

செய்தியாளர்களிடம் பேசிய கோயம்புத்தூர் தங்க நகை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முத்துவெங்கட்ராம், கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்கத்தின் விலை சுமார் 140 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். தற்போது FIFO மற்றும் Weighted Average Method முறைகளின் அடிப்படையில்தான் வருமான வரி தாக்கல் செய்ய முடிவதாகவும், இதனால் பல தொழில்முனைவோர் தங்களது மூலதனத்தையே பயன்படுத்தி வரி செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

எனவே, நகை உற்பத்தித் துறையின் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு வரிச்சட்டங்களில் தேவையான மாற்றங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மேலும், சங்கம் தயாரித்துள்ள கோரிக்கை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் மற்றும் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலிடம் வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...