பேரூர் டி.எஸ்.பி நடப்பயண ரோந்து; பொதுமக்களிடம் குறைகள் கேட்பு

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் பேரூர் டி.எஸ்.பி கால்நடை ரோந்து மேற்கொண்டு பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்களிடம் கலந்துரையாடி பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டார்.

Coimbatore:

பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து, காவல்துறை மற்றும் மக்களுக்கிடையேயான தொடர்பை வலுப்படுத்தும் நோக்கில் பேரூர் டி.எஸ்.பி தொண்டாமுத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கால்நடை ரோந்துப் பணியில் ஈடுபட்டார்.



கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின்படி, காவலர்கள் தங்களது காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் நடந்து சென்று ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பேரூர் டி.எஸ்.பி குளத்துப்பாளையம் முதல் குபேரபுரி வரை நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.



ரோந்துப் பணியின் போது பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்ல சாலையோரத்தில் நின்றிருந்த மாணவர்களிடம் கலந்துரையாடிய அவர், பாதுகாப்பு தொடர்பான அறிவுரைகளை வழங்கினார்.



தொடர்ந்து சந்தைப்பேட்டை பேருந்து நிறுத்தப் பகுதியில் பேருந்துக்காக காத்திருந்த பொதுமக்களின் பாதுகாப்பு வசதிகள் குறித்து காவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும், அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமராக்கள் அமைப்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் குபேரபுரி பகுதியில் வசித்து வரும் வடமாநில தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்கு சென்று, அவர்கள் பணிபுரியும் இடங்கள், தங்கும் வசதிகள், அடையாள ஆவணங்கள் மற்றும் அனுமதி விவரங்கள் குறித்து சோதனை நடத்தினார்.

காவல்துறையினரின் இந்த கால்நடை ரோந்துப் பணி பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...