சரவணம்பட்டியில் கையகப்படுத்தப்பட்ட 73 வாகனங்கள்; உரிமையாளர்களுக்கு அழைப்பு

கோவை சரவணம்பட்டி காவல் நிலைய எல்லையில் கையகப்படுத்தப்பட்ட 73 இருசக்கர வாகனங்களை உரிய ஆவணங்களுடன் வந்து பெற்றுக்கொள்ள பொதுமக்களுக்கு காவல்துறை அழைப்பு விடுத்துள்ளது.


Coimbatore:

கோவை சரவணம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கையகப்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை உரிய ஆவணங்களுடன் வந்து பெற்றுக்கொள்ள பொதுமக்களுக்கு சரவணம்பட்டி காவல்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சரவணம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கேட்பாரற்று நின்றிருந்த, பதிவு எண் இல்லாத மற்றும் சேஸ் எண்கள் தெளிவாக இல்லாத சுமார் 73 இருசக்கர வாகனங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனங்கள் தொடர்பாக பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) சட்டத்தின் கீழ் பிரிவு 106-ன் படி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தற்போது சரவணம்பட்டி காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

கையகப்படுத்தப்பட்ட வாகனங்களில் சிலவற்றை பொதுமக்கள் தவறுதலாக நிறுத்திவிட்டு சென்றிருக்கலாம் அல்லது காணாமல் போன வாகனங்களாக இருக்கக்கூடும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனவே, இந்த வாகனங்கள் தங்களுடையது என கருதும் பொதுமக்கள் உரிய ஆவணங்கள் மற்றும் அடையாளச் சான்றுகளுடன் சரவணம்பட்டி காவல் நிலையத்தை அணுகி வாகனங்களை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகன உரிமையாளர்கள் விரைவாக காவல் நிலையத்தை தொடர்புகொண்டு தேவையான நடைமுறைகளை பூர்த்தி செய்து வாகனங்களை மீட்டுக்கொள்ளுமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...