மடத்துக்குளம் ராஜவாய்க்காலை தூர்வாரி குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள கோரி விவசாயிகள் மனு

பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ள காரத்தொழவு ராஜவாய்க்காலில் குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு, ஆயிரம் ஏக்கர் நஞ்சை நிலங்களுக்கு தடையின்றி பாசன வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள காரத்தொழவு அமராவதி பழைய ராஜவாய்க்காலில் குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.



விவசாயிகள் அளித்த மனுவில், காரத்தொழவு பகுதியில் அமைந்துள்ள ராஜவாய்க்கால் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் பராமரிப்பின்றி உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் அந்த வாய்க்காலை நம்பியுள்ள சுமார் 12 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நஞ்சை நிலங்கள் போதிய பாசன வசதி பெற முடியாமல் உள்ளதாகவும், இதன் காரணமாக விவசாய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

மேலும், வாய்க்காலில் படிந்துள்ள மணல் மற்றும் புதர்களால் நீரோட்டம் தடைபட்டு, நிலங்களுக்கு தண்ணீர் சீராக சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் பல விவசாயிகள் முறையான சாகுபடி மேற்கொள்ள முடியாமல் பொருளாதார இழப்பை சந்தித்து வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக ராஜவாய்க்காலை தூர்வாரி குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு நீரோட்டத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரத்தொழவு அமராவதி பழைய ராஜவாய்க்கால் நீரை பயன்படுத்தும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...