கோவையில் அடுத்தடுத்து நடந்த சாலை விபத்துகளில் 3 பேர் படுகாயம்

கோவை மாநகரில் வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் பெண் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். சரவணம்பட்டி, ஆவாரம்பாளையம், காளப்பட்டி ஆகிய இடங்களில் பைக் மற்றும் சரக்கு வாகன மோதலில் மூவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


கோவை: கோவை மாநகரில் வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் பெண் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தை ஏற்படுத்திய வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை சரவணம்பட்டி சத்தி சாலையில் சாலையைக் கடக்க முயன்ற சீனிவாசன் (65) என்ற முதியவர் மீது, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தீபக் (23) என்பவர் ஓட்டி வந்த பைக் மோதியது. இந்த விபத்தில் முதியவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக Sub-Inspector ராஜசேகர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


இரண்டாவது விபத்தில், கோவை பி.என்.பாளையம் கருப்பாயம்மாள் தோட்டத்தைச் சேர்ந்த முருகன் (56) என்பவர் தனது மனைவி பேபி (54) உடன் ஸ்கூட்டரில் ஆவாரம்பாளையம் சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது பின்னால் வந்த சரக்கு வாகனம் அவர்களது ஸ்கூட்டர் மீது மோதியது. இந்த விபத்தில் பேபிக்கு இடுப்பில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துணை ஆய்வாளர் ஆமோஸ் சந்திரன் இந்த வழக்கில் விசாரணை நடத்தி வருகிறார்.


மூன்றாவது விபத்தில், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த நீலாம்பாள் (50) என்பவர் பைக்கின் பின்னால் அமர்ந்து காளப்பட்டி சாலையில் உள்ள Bharat Petrol பங்க் அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி பைக் மீது பலமாக மோதியது. இதில் நீலாம்பாள் கீழே விழுந்ததோடு, லாரியின் இடது பக்க முன் சக்கரம் அவரது வலது கையின் மேல் ஏறியதில் கை முழுவதும் நசுங்கியது.


கடுமையாக காயமடைந்த நீலாம்பாள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். லாரி ஓட்டுனர் பெரியசாமி (48) மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...