மேற்குத் தொடர்ச்சி மலையில் கனமழை: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்குத் தொடர்ச்சி மலையில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி கோவை குற்றாலம் அருவி இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக மூடப்படுவதாக போளுவாம்பட்டி வனத்துறை அறிவித்துள்ளது.


கோவை: கோவையின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான கோவை குற்றாலம் அருவி, வெள்ளப்பெருக்கு காரணமாக இன்று (06/06/2026) முதல் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக மூடப்படுவதாக போளுவாம்பட்டி வனத்துறை சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, கடுமையான கனமழை பெய்து வருகிறது.



மலையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் இந்த தொடர் மழையின் காரணமாக, கோவை குற்றாலம் அருவிக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, அருவியில் வெள்ள நீர் ஆபத்தான அளவைத் தாண்டி, காட்டாற்று வெள்ளமாக கரைபுரண்டு ஓடி வருகிறது.

பாறைகள் மற்றும் தரைப்பகுதிகள் தெரியாத அளவிற்கு தண்ணீர் ஆக்ரோஷமாக பாய்ந்து வருவதால், அங்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதோ அல்லது அருவியின் அருகே செல்வதோ அவர்களின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு, போளுவாம்பட்டி வனச்சரகம் சார்பில் அவசர அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

"மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பு கருதி கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா இன்று 06/06/2026-ம் தேதி தற்காலிகமாக மூடப்படுகிறது" என்று வனத்துறை தெரிவித்துள்ளது.

சனிக்கிழமையான இன்று வார இறுதி விடுமுறையை கொண்டாட கோவை குற்றாலத்திற்கு செல்ல திட்டமிட்டிருந்த உள்ளூர் மற்றும் வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள், வனத்துறையின் இந்த அதிரடி அறிவிப்பால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இருப்பினும், ஆபத்தான இந்த வெள்ளக் காலத்தில் வனத்துறையினரின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என போளுவாம்பட்டி வன அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...