உலக சுற்றுச்சூழல் தினம்: துணிப்பை தானியங்கி இயந்திரம் திறந்து வைத்த தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் (TNAU) மனிதச் சங்கிலி, மரக்கன்று வழங்கல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் துணிப்பை விநியோகிக்கும் தானியங்கி இயந்திரம் திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


கோவை, ஜூன் 5: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) இயற்கை வள மேலாண்மை இயக்ககத்தின் கீழ் செயல்படும் சுற்றுச்சூழல் அறிவியல் துறை சார்பில், உலக சுற்றுச்சூழல் தினம் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் பசுமை முன்னெடுப்புகளுடன் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.



“இயற்கையிலிருந்து ஊக்கம் பெறுவோம்! காலநிலைக்காக! நமது எதிர்காலத்திற்காக!” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் கா. சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற மனிதச் சங்கிலி நிகழ்வை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் துணிப்பை விநியோகிக்கும் தானியங்கி இயந்திரம் பல்கலைக்கழக வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது.

மேலும், மரம் வளர்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் பலன்தரும் மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.

விழாவின் தொடக்கத்தில் சுற்றுச்சூழல் அறிவியல் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் அ. பரணி வரவேற்புரை வழங்கினார். இயற்கை வள மேலாண்மை இயக்குநர் முனைவர் சு. கார்த்திகேயன் துவக்கவுரை நிகழ்த்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.



மாணவர் நல மையத்தின் முதன்மையர் முனைவர் ஞா. பாலசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, திரு. வி. திருநாவுக்கரசு இ.வ.ப. உலக சுற்றுச்சூழல் தினத்தின் முக்கியத்துவம் மற்றும் இயற்கை வளப் பாதுகாப்பின் அவசியம் குறித்து எடுத்துக்காட்டுகளுடன் விளக்கமளித்தார்.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்காக ஓவியம், கவிதை, புதையல் வேட்டை, விளம்பர நாடகம், மீம் உருவாக்கம் மற்றும் மாதிரி பசுமைத் தீர்ப்பாயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிகள் மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவித்ததோடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வையும் வலுப்படுத்தின.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தனிமனிதர்களின் சிறிய செயல்பாடுகளே பெரிய மாற்றங்களை உருவாக்கும் என்பதை வலியுறுத்திய பல்கலைக்கழக நிர்வாகம், இயற்கை வளங்களைப் பாதுகாத்து நிலையான வாழ்க்கை முறையை அனைவரும் பின்பற்ற வேண்டுமென அழைப்பு விடுத்தது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...