பீளமேடு வார்டு 27-ல் சுகாதார மையம், பள்ளி, தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர் அம்பிகா தனபால்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் ஆரம்ப சுகாதார மையம், பள்ளியில் புத்தக வழங்கல், சாக்கடை அடைப்பு சரிசெய்தல், குப்பை சேகரிப்பு ஆகிய பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்து பொதுமக்களிடம் கருத்து கேட்டறிந்தார். வார்டு சூப்பர்வைசர் ஈஸ்வரி உடன் இருந்தார்.


Coimbatore: சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பல்வேறு மேம்பாட்டு மற்றும் நலத்திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் பாரதி காலனி ஆரம்ப சுகாதார மையம், துவக்கப்பள்ளி, சாக்கடை பராமரிப்பு, குப்பை சேகரிப்பு உள்ளிட்ட பணிகள் அடங்கும்.



பீளமேடு பாரதி காலனி பகுதியில் இயங்கி வரும் கோயம்புத்தூர் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மையத்தை கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் பொதுமக்கள் வருகை பதிவேடு மற்றும் குழந்தைகள் தடுப்பூசி பதிவேட்டையும் சரிபார்த்தார். இந்த ஆய்வில் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் உடன் இருந்தனர்.



பீளமேடு கோயமுத்தூர் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் மாணவ மாணவியருக்கு புதிய புத்தகம் மற்றும் நோட்டுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட கவுன்சிலர் அம்பிகா தனபால் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை நேரடியாக வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் இதில் உடன் இருந்தனர்.



கணக்குப்பிள்ளை வீதி பகுதியில் சாக்கடை அடைப்பு சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதை கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சாக்கடை அடைப்பை முழுமையாக சரி செய்யுமாறு தூய்மை பணியாளரிடம் அறிவுறுத்தினார். வார்டு சூப்பர்வைசர் ஈஸ்வரி இதில் உடன் இருந்தார்.



பாரதி காலனி பகுதியில் தினசரி குப்பை சேகரிப்பு சரியாக நடைபெறுகிறதா என்பதை கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று ஆய்வு செய்தார். குப்பை வாங்கும் ஆட்டோ சரியாக வருகிறதா என்று பொதுமக்களிடம் கேட்டறிந்தார். வார்டு சூப்பர்வைசர் ஈஸ்வரி இதில் உடன் இருந்தார்.



பெருமாள் கோயில் வீதி பகுதியில் பேட்டரி ஆட்டோ மூலம் குப்பை சேகரிப்பு பணியை கவுன்சிலர் அம்பிகா தனபால் ஆய்வு செய்தார். மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து தரும்படி பொதுமக்களிடம் வலியுறுத்தினார். வார்டு சூப்பர்வைசர் ஈஸ்வரி இதில் உடன் இருந்தார்.

Newsletter

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...