“நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” - கோவையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையம் வந்தபோது, “நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” உள்ளிட்ட ஆதரவு முழக்கங்களை எழுப்பிய அதிமுக தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.


கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் இல்லத்தில் நடைபெற்ற துக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக கோவை வந்திருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தனது நிகழ்வுகளை முடித்துக்கொண்டு கோவை விமான நிலையம் வழியாக சென்னை புறப்பட்டார்.



இதையொட்டி, அவரை வழியனுப்புவதற்காக அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பெருந்திரளாக கோவை விமான நிலையம் முன்பாக திரண்டிருந்தனர்.



எடப்பாடி பழனிச்சாமி விமான நிலையத்திற்கு வருவதற்கு முன்பாகவே, அங்கு காத்திருந்த தொண்டர்கள் உற்சாகமாக கோஷங்களை எழுப்பத் தொடங்கினர். குறிப்பாக, “காசுக்கு விலை போக மாட்டோம்”, “நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி”, “வருங்கால முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி” என ஆதரவு முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர், விமான நிலையம் வந்தடைந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்து, ஆதரவு முழக்கங்களுடன் சென்னைக்கு வழியனுப்பினர்.

தொண்டர்கள் திரளாக குவிந்ததாலும், தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பப்பட்டதாலும், கோவை விமான நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...