கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, 21-ம் எண் பேருந்தை உடனடியாக அப்பகுதிக்கு இயக்க சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு கோவை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் பகுதியில் அமைந்துள்ள அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, 21-ம் எண் அரசு நகரப் பேருந்தை உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்குமாறு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, கோவை மாவட்டஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.

தொண்டாமுத்தூர் அருகேயுள்ள கெம்பனூர் பகுதியில் அமைந்துள்ள அண்ணாநகரில் நூற்றுக்கணக்கான பட்டியலின குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் தங்களது அன்றாடப் பணிகள், மாணவர்களின் பள்ளி மற்றும் கல்லூரி பயணங்கள் உள்ளிட்ட தேவைகளுக்காக 21-ம் எண் அரசு நகரப் பேருந்தையே பெரிதும் நம்பியுள்ளனர்.



இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அண்ணாநகர் பகுதிக்குள் பேருந்து முறையாக இயக்கப்படவில்லை என்றும், பட்டியலின மக்களை ஏற்றுவதில் பாகுபாடு காட்டப்படுவதாகவும் சமூக வலைதளங்களில் புகார்கள் வெளியாகின. இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் கவனம் பெற்றதுடன், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்திய அமைச்சர் வன்னி அரசு, "மக்களாட்சியில் சாதியின் பெயரால் பொதுமக்கள் புறக்கணிக்கப்படுவதை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது" எனக் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பன்னருக்கு அனுப்பிய உத்தரவில், "அண்ணாநகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 21-ம் எண் அரசு நகரப் பேருந்தை எவ்வித தங்குதடையுமின்றி உடனடியாக இயக்க வேண்டும். பேருந்து சேவையில் அனைத்து மக்களும் சமமாக நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்" என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.



மேலும், இனிவரும் காலங்களில் இப்பகுதியில் சாதிய தீண்டாமை தொடர்பான எந்தவித புகார்களும் எழாத வகையில் மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்துத் துறையும் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் வன்னி அரசு உத்தரவிட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...