கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அதிகாரிகளுடன் விரிவான ஆய்வு கூட்டம் நடத்தினார். மாவட்ட அமைச்சர்கள் இருவரும் கலந்து கொள்ளவில்லை.


தமிழ்நாடு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கோவையில் இன்று பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.

முன்னதாக, நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், அங்குள்ள விளையாட்டு வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளை பார்வையிட்டார்.



அதனைத் தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்ந்த ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார், துறையின் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.



கூட்டத்தில், கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் பொதுப்பணித்துறை சார்ந்த வளர்ச்சிப் பணிகள் குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்றது. மாவட்டத்தில் நடைபெற்று வரும் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களின் முன்னேற்ற நிலையை அமைச்சர் ஆய்வு செய்து, பணிகளின் தற்போதைய நிலவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.



இதையடுத்து, திட்டங்கள் விரைவாகவும் தரமாகவும் நிறைவேற்றப்படுவதற்கான தேவையான வழிகாட்டுதல்களை அதிகாரிகளுக்கு வழங்கிய அமைச்சர், பணிகளை காலக்கெடுவிற்குள் முடிக்குமாறும் அறிவுறுத்தினார்.

மாவட்ட வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்பான இந்த முக்கிய ஆய்வுக் கூட்டத்தில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்களான சம்பத்குமார் மற்றும் விக்னேஷ் ஆகியோர் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...