செங்குளத்தில் தூர்வாரும் பணியில் ஈடுபட்ட கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர்

கோவை மாவட்டத்தில் அழிந்துவரும் நீர்நிலைகளை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் கோவையில் தன்னார்வலர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் ஆகியோரால் உருவாக்கப்பட்டதே கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு.



இக்குழுவினர் வார இறுதிநாளான ஒவ்வொரு ஞாயிறன்றும் நீர்நிலைகளில் களப்பணியில் ஈடுபட்டு தூர்வாரி வருகின்றனர். அதன்படி கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் இன்று செங்குளத்தில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.



அப்போது, செங்குளத்தில் இருந்த சுமார் 3 டன் பிளாஸ்டிக் கழிவுகள் தன்னார்வலர்கள் துணையுடன் அகற்றப்பட்டது. தொடர்ந்து, குளத்தில் உள்ள புதர்கள் கட்டிட கழிவுகள் ஜே.சி.பி இயந்திரங்கள் மற்றும் லாரிகள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது.



மேலும், 12.5 கிமீ தூரமுள்ள குனியமுத்துர் தடுப்பணை வாய்க்கால் தூர்வாரும் பணியானது நமது கோவை நமது பசுமை அமைப்பின் உதவியுடன் நடைபெற்று வருகிறது. இப்பணியில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் 150 தன்னார்வலர்கள், கேமரூன் மனுஃபேட்சரிங் இந்தியா பிவிடி லிமிட்டடு உதவியுடன் வெள்ளலூர் குளத்தில் புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு இதுவரை 65 சதவிகிதம் பணி நிறைவடைந்துள்ளது.

தொடர்ந்து, மலுமிச்சம்பட்டி கிராமத்தில் உள்ள 20 ஏக்கர் மழை நீர் குட்டை தூர்வாரும் பணியினையும் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் துவங்கி உள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...