உதகையில் 15வது ரோஜா கண்காட்சி துவக்கம்


நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள அரசு ரோஜா பூங்காவில் 15-வது ‘உதகை ரோஜா கண்காட்சி 2017’ இன்று தொடங்கியது. 



உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் ஆண்டுதோறும் கோடை விடுமுறை நாட்களில் இந்த கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த 15-வது ஆண்டு கண்காட்சியை சிறப்பிக்கும் விதமாக 31 ஆயிரம் ரோஜா மலர்களால் 15 அடி நீளம் மற்றும் 10 அடி உயரம் கொண்ட ரோஜாவின் உருவம் உருவாக்கப்பட்டுள்ளது. 



மேலும், தமிழர்களின் பாரம்பரிய கலையான பரத நாட்டியத்தை காட்சிப்படுத்தும் விதமாக 7 பரதநாட்டிய முத்திரைகளுடனான பெண் உருவ அமைப்பை, உதகை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களை சேர்ந்த தோட்டக்கலை துறையினர் வடிவமைத்திருந்தனர். 



கிருஷ்ணகிரி மாவட்ட தோட்ட கலைத்துறையினர் ரோஜாக்களை கொண்டு அல்போன்ட்சா மாம்பழத்தின் உருவ அமைப்பையும், சேலம் மற்றும் மதுரை மாவட்ட தோட்ட கலைத்துறையினர் முறையே ராக்கெட் மற்றும் புறா-வின் உருவங்களையும் வடிவமைத்திருந்தனர். ரோஜாக்கள் மட்டுமன்றி, காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு உருவ அமைப்புகளும், ‘கார்ட்டூன்’ வடிவங்களும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. 



இக்கண்காட்சியை காண ஊட்டி ரோஜா பூங்காவில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் திரண்டனர்.  இரண்டு நாட்கள் நடைபெற இருக்கும் இக்கண்காட்சி நாளை மாலையுடன் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.    

        



            

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...