கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வாலிபர்களை மீது வழக்குப்பதிவு செய்த சாய்பாபா   காலனி போலீசார்  அவர்களை கைது செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (34). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் தற்காலிக டிரைவராக பணியாற்றி வருகிறார்.

சம்பவத்தன்று, மருதமலையில் இருந்து ஆவாரம்பாளையம் நோக்கி சென்ற அரசு பேருந்தை ரவிக்குமார் ஓட்டி வந்தார். அப்போது மேட்டுப்பாளையம் சாலையில் அவிநாசிலிங்கம் கல்லூரி அருகே பேருந்து சென்றுகொண்டிருந்த போது, சிலர் பேருந்தை அடித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து பேருந்தை நிறுத்திய டிரைவர் ரவிக்குமார், சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர்களை தட்டிக்கேட்டுள்ளார். அப்போது அந்த வாலிபர்கள் அவரை ஆபாசமாக திட்டியதுடன், கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.

பயணிகள் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் இதுகுறித்து ரவிக்குமார் சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தீபா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், விருதுநகர் மாவட்டம் நல்லம்மா நாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் (23) மற்றும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மணிகண்டன் (21) ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்கள் தற்போது கவுண்டம்பாளையம் தக்கல் மார்க்கெட் அருகே தங்கி இருந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Newsletter

வார்டு வளர்ச்சிப் பணிகள் புறக்கணிப்பு குற்றச்சாட்டு; கோவையில் தி.மு.க கவுன்சிலர் தர்ணா

கோவை அருகே தென்கரை பேரூராட்சி மன்றக் கூட்டத்தின் போது, தனது வார்டில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் புறக்கணிக...

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...