கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வாலிபர்களை மீது வழக்குப்பதிவு செய்த சாய்பாபா   காலனி போலீசார்  அவர்களை கைது செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (34). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் தற்காலிக டிரைவராக பணியாற்றி வருகிறார்.

சம்பவத்தன்று, மருதமலையில் இருந்து ஆவாரம்பாளையம் நோக்கி சென்ற அரசு பேருந்தை ரவிக்குமார் ஓட்டி வந்தார். அப்போது மேட்டுப்பாளையம் சாலையில் அவிநாசிலிங்கம் கல்லூரி அருகே பேருந்து சென்றுகொண்டிருந்த போது, சிலர் பேருந்தை அடித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து பேருந்தை நிறுத்திய டிரைவர் ரவிக்குமார், சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர்களை தட்டிக்கேட்டுள்ளார். அப்போது அந்த வாலிபர்கள் அவரை ஆபாசமாக திட்டியதுடன், கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.

பயணிகள் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் இதுகுறித்து ரவிக்குமார் சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தீபா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், விருதுநகர் மாவட்டம் நல்லம்மா நாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் (23) மற்றும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மணிகண்டன் (21) ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்கள் தற்போது கவுண்டம்பாளையம் தக்கல் மார்க்கெட் அருகே தங்கி இருந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...