பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.


கோவை: வரும் 28ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அறுவைக் கூடங்களில் மட்டுமே மாடுகள் பலியிட அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி நீதிமன்றத்தை அணுகியுள்ளது.

இந்து மக்கள் கட்சி (தமிழகம்) சார்பில் இளைஞர் அணி மாநில பொதுச்செயலாளர் சூர்யா இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தின்படி, பொது இடங்களில் கால்நடைகளை வதை செய்வது சட்டவிரோதம் என்பதால் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. 

மேலும், சென்னை, கோவையின் பல்வேறு பகுதிகளில் பொது இடங்களிலும் விதிகளை மீறி மாடுகள் வெட்டப்படுவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், இந்தாண்டு பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது, தற்காலிக செட்கள் அமைக்கக்கூடாது, அங்கீகரிக்கப்பட்ட அறுவைக் கூடங்களில் மட்டும் காளை மாடுகள் பலியிட அனுமதிக்க வேண்டும் எனக் கோரி இந்து மக்கள் கட்சி (தமிழகம்) சார்பில்

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக தலைமைச் செயலாளர், டி.ஜி.பி., கோவை மாவட்ட ஆட்சியாளர், காவல் ஆணையாளர், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் செல்வபுரம் காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் வரும் 27ஆம் தேதிக்குள் பதிலளிக்க நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து வழக்கு மீண்டும் 27ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...