கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய வேண்டும் என சிபிஐ(எம்) சார்பில் மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் மனு அளிக்கப்பட்டது.


கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிபிஐ(எம்) வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக சிபிஐ(எம்) கோவை மாவட்டச் செயலாளர் சி. பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தினந்தோறும் ஆயிரக்கணக்கான உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சை பெறும் கோவை அரசு மருத்துவமனையின் பல்வேறு வார்டுகளில் கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மிக மோசமான நிலையில் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, சிறுநீரகவியல் துறையில் நோயாளிகள் தங்கியிருக்கும் வார்டுகளில் கழிவறைகள் மிகக் குறைவாக உள்ளதுடன், அவையும் போதிய பராமரிப்பு இல்லாமல் சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நோயாளிகளுக்கு கூடுதல் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் நிலவுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண வலியுறுத்தி, சிபிஐ(எம்) கோவை மாவட்டக் குழு சார்பில் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் கீதாஞ்சலியை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது. அப்போது, மருத்துவமனையில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மனுவைப் பெற்றுக்கொண்ட மருத்துவக் கல்லூரி முதல்வர், பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து உரிய மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது சிபிஐ(எம்) கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே. அஜய்குமார், கே.எஸ். கனகராஜ் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர் மூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...