மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்ததால் பெண் விவசாயி உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதையடுத்து விவசாயிகள் சங்கம் TANGEDCO அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளது.


Coimbatore: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் நடுக்கம் தரும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அறுந்து விழுந்த மின்கம்பி சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்ததால் பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.




இந்த அதிர்ச்சி தரும் சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, மாநில பொதுச் செயலாளர் பி. கந்தசாமி தலைமையிலான விவசாயிகள் சங்கம் (சாதி மதம் கட்சி சார்பற்றது) தமிழ்நாடு மின்சார வாரியம் (TANGEDCO) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநருக்கு விரிவான மனு அளித்துள்ளது.




மின்கம்பி பராமரிப்பு குறைபாடுகள் காரணமாக இந்த பரிதாபகரமான விபத்து ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கிராமப்புற பகுதிகளில் மின்கம்பிகள் மற்றும் மின் இணைப்புகளை முறையாக பராமரிக்காததால் இதுபோன்ற உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.




TANGEDCO அதிகாரிகள் அனைத்து மின்கம்பிகள் மற்றும் மின் இணைப்புகளை தொடர்ந்து ஆய்வு செய்து பராமரிக்க வேண்டும் என்றும், குறிப்பாக வயல் வெளிகள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் உள்ள பழைய மின்கம்பிகளை மாற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.




மேலும், இதுபோன்ற அசம்பாவித விபத்துகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு போதுமான இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

Newsletter

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...