கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘காட்மா’ தொழில் அமைப்பு, மின்வாரியத்தில் காலி பணியிடங்களை நிரப்பி, பிரச்சனைக்கு தமிழக முதல்வர் தனி கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.


Coimbatore: கோவை: கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்கமான ‘காட்மா’, தமிழகத்தில் நீடித்து வரும் மின்தடை பிரச்சனைக்கு தமிழக முதல்வர் நேரடி கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து ‘காட்மா’ தொழில் அமைப்பின் தலைவர் சிவக்குமார் கூறியதாவது:

“கடந்த சில நாட்களாக கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை காரணமாக அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. மின்தடை ஏற்பட்ட பிறகு அதை சரிசெய்ய நீண்ட நேரம் ஆகுவதால் தொழிற்சாலைகளின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படுகிறது.

குறிப்பாக இரவு நேரங்களில் நீண்ட நேரம் மின்தடை நீடிப்பதால் பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் புதிதாக நியமிக்கப்படாததால் கடுமையான பணியாளர் பற்றாக்குறை நிலவி வருவதாக தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக அதிகாரிகளே உதவியாளர்களின் பணிகளையும் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மின்சார நிலை கட்டணம், உச்சநேர மின் பயன்பாட்டு கட்டணம் மற்றும் யூனிட் கட்டணம் உள்ளிட்டவை பலமடங்கு உயர்த்தப்பட்ட போதிலும், தேவையான பணியாளர்கள் நியமிக்கப்படாதது கவலைக்கிடமானது. இது எதிர்காலத்தில் தொழில்துறை செயல்பாடுகளை மேலும் பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்தும்,” என்றார்.

மேலும், “தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். தொழில் அமைப்புகளுடன் நேரடியாக ஆலோசனை நடத்தி, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து தொழில் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு உடனடியாக எடுக்க வேண்டும்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...