கோவை சிறைக்குள் தின்பண்டத்தில் மறைத்து கஞ்சா கடத்த முயற்சி : 4 பேர் மீது வழக்குப்பதிவு..!

கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு தின்பண்டங்களுக்குள் மறைத்து கஞ்சா கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கைதிகள் உட்பட 4 பேர் மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை:

கோவை மத்திய சிறையில் மகேஷ் @ மகேந்திரன் (26), சுராளி @ சுரேந்திரன் (22), கலாநிதி @ அபிவிஷ்ணு (27) ஆகியோர் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களைச் சந்திப்பதற்காக சின்ன தடாகம் பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவர் சிறைத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்து அனுமதி பெற்றிருந்தார்.

அதன்படி, கடந்த 12ஆம் தேதி கோவை மத்திய சிறைக்கு வந்த நவீன், கைதிகளுக்கு வழங்குவதற்காக வர்க்கி உள்ளிட்ட தின்பண்டங்களை கொண்டு வந்துள்ளார். அவற்றை மகேஷ் @ மகேந்திரனிடம் வழங்குமாறு கூறி சிறைக் காவலர்களிடம் ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளார்.

சிறை விதிமுறைகளின்படி, கைதிகளுக்கு வழங்கப்படும் பொருட்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அப்போது வர்க்கி பாக்கெட்டுகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6.24 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து கோவை மத்திய சிறை ஜெயிலர் திருமலை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், NDPS சட்டம் மற்றும் சிறைச்சாலை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கஞ்சா கடத்த முயன்ற நவீன் மற்றும் அதை பெற முயன்ற கைதிகள் மகேஷ் @ மகேந்திரன், சுராளி @ சுரேந்திரன், கலாநிதி @ அபிவிஷ்ணு ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...