மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் : பக்தர்கள், வாகன ஓட்டிகள் அவதி..!

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு மண்டிகளுக்கு வரும் கனரக லாரிகள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால், வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் பொதுமக்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதியடைந்து வருகின்றனர்.


Coimbatore: மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் உள்ள காந்தி மைதானம் பகுதியில் நூற்றுக்கணக்கான தனியார் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு மண்டிகள் செயல்பட்டு வருகின்றன.



நீலகிரி மாவட்டம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, குஜராத், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் லாரிகள் மூலம் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு விற்பனைக்காக இங்கு கொண்டு வரப்படுகிறது.

இதனால், வாரத்தின் பெரும்பாலான நாட்களில் லோடுகளை இறக்குவதற்காக வரும் கனரக லாரிகள் சாலையோரங்களில் தாறுமாறாக நிறுத்தப்பட்டு வருகின்றன. இந்த சாலையின் வழியாகவே தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் சென்று வருவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

மேலும், நெல்லித்துறை, தேக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அவசர மருத்துவ உதவிக்காக வரும் ஆம்புலன்ஸ்கள் மற்றும் பிற வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதியடைகின்றன. இதனால் வாகன ஓட்டிகளுக்கும் லாரி டிரைவர்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவதாகவும், சில நேரங்களில் அது கைகலப்பாக மாறுவதாகவும் கூறப்படுகிறது.

லாரிகளை முறையாக சாலையோரத்தில் நிறுத்த வேண்டும் என்று ஓட்டுநர்களுக்கு பலமுறை அறிவுறுத்தப்பட்டும், சிலர் காவல்துறை உத்தரவுகளை மீறி செயல்பட்டு வருகின்றனர். எனவே, தொடர் விதிமீறலில் ஈடுபடுவோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...