காரமடை அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டுப்பன்றிகள் - பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை..!

காரமடை அருகே 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த தாய் மற்றும் குட்டி காட்டுப்பன்றிகளை, தீயணைப்புத்துறையினர் மற்றும் வனத்துறையினர் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர்.


Coimbatore: காரமடையை அடுத்த சீளியூர் பனப்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜண்ணன் என்பவரின் விவசாய நிலத்தில் 60 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று உள்ளது. அந்த கிணற்றில் சுமார் 10 அடி அளவிற்கு தண்ணீர் நிரம்பியிருந்தது.



நேற்று முன்தினம் மாலை தோட்டப்பணிகளை முடித்து வீட்டிற்கு சென்ற ராஜண்ணன், மறுநாள் காலை தோட்டத்திற்கு வந்தபோது கிணற்றிலிருந்து விலங்குகள் ஓலமிடும் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து கிணற்றுக்குள் எட்டிப்பார்த்த போது, தாய் மற்றும் குட்டி என இரண்டு காட்டுப்பன்றிகள் தண்ணீரில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது.

உடனடியாக அவர் காரமடை வனத்துறையினருக்கும் மேட்டுப்பாளையம் தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் அனில் குமார் மற்றும் காரமடை வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான குழுவினர், கிணற்றுக்குள் இறங்கி காட்டுப்பன்றிகளை மீட்க முயன்றனர்.

காட்டுப்பன்றிகள் தாக்கக்கூடும் என்பதால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் வலை விரித்து சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தாய் மற்றும் குட்டி காட்டுப்பன்றிகளை பத்திரமாக மீட்டனர். பின்னர் அவற்றை வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக விடுவித்தனர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...