கனமழை எதிரொலி: கோவை விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் விமானங்கள் கொச்சிக்கு திருப்பி விடப்பட்டது

கோவையில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றால் சின்னியம்பாளையம் அருகே கோவை சர்வதேச விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக விமானங்கள் தற்காலிகமாக கொச்சிக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


கோவை: இன்று மாலை கோவையில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் மற்றும் கிளைகள் சாய்ந்து விழுந்தன. இதன் தொடர்ச்சியாக, கோவை சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள சின்னியம்பாளையம் பகுதியில் விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது.

சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த பகுதியில் பாதுகாப்பு சிக்கல் ஏற்பட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை நோக்கி வந்த சில விமானங்கள் தற்காலிகமாக கொச்சி விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவத்தையடுத்து, பாதுகாப்பு பணிக்காக சிஐஎஸ்எஃப் வீரர்கள் அப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர். சேதமடைந்த பகுதியை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இரவு 9.30 மணிக்குப் பிறகு நிலைமை சீரடையும் என்றும், அதன் பின்னர் கோவை விமான நிலையத்தில் விமான சேவைகள் மீண்டும் வழக்கம்போல் இயக்கப்படும் என்றும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...