பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் கட்டாயம் பொருத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. இல்லையேல் தகுதி சான்றிதழ் வழங்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது.


Coimbatore: நாடு முழுவதும் பொது போக்குவரத்தை பயன்படுத்தும் பயணியர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அரசு மற்றும் தனியார் வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் கட்டாயம் பொருத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தின் Coimbatore-ஐச் சேர்ந்த எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் Dr. ராஜசேகரன் என்பவர், சாலை விபத்துகளை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி கடந்த 2012ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து அவ்வப்போது சில உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.

இந்நிலையில், பொது போக்குவரத்தை பயன்படுத்தும் பயணியர் பாதுகாப்பு குறித்து நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் அடங்கிய அமர்வு முக்கியமான உத்தரவை நேற்று பிறப்பித்தது.

நீதிமன்ற உத்தரவின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

"எங்களுக்கு கிடைத்துள்ள புள்ளி விபரங்களின்படி, அரசு வாகனங்களில் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே GPS எனப்படும் இருப்பிட கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இது மிகுந்த கவலையளிக்கிறது. மத்திய மோட்டார் வாகன விதிகளை சரியாக அமல்படுத்தாத மாநில அரசுகளை கண்டிக்கிறோம்.

இனி, GPS கருவி மற்றும் Emergency பொத்தான் எனப்படும் அவசரகால பொத்தான் பொருத்தப்படாத வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் அல்லது போக்குவரத்து அனுமதி வழங்கப்படக்கூடாது.

கடந்த 2018 டிசம்பர் 21க்கு முன் பதிவு செய்யப்பட்ட பழைய வாகனங்களிலும் இந்த கருவிகளை பொருத்த, அந்தந்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொருத்தப்படும் கருவிகள் சரியாக செயல்படுவதை உறுதி செய்ய, அவற்றை மத்திய அரசின் 'வாஹன்' தரவுத்தளத்துடன் இணைத்து நிகழ்நேரத்தில் கண்காணிக்க வேண்டும்.

வாகன தயாரிப்பு நிறுவனங்கள், இனி வாகனங்களை விற்பனை செய்யும்போதே வேகக் கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்த வேண்டும்.

தேசிய சாலை பாதுகாப்பு வாரியம் இன்னும் அமைக்கப்படாதது அதிருப்தி அளிக்கிறது. மத்திய அரசுக்கு கடைசி வாய்ப்பாக, மூன்று மாதங்களுக்குள் இந்த வாரியத்தை அமைக்க வேண்டும்" என உத்தரவிடுகிறோம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவு பயணியர் பாதுகாப்பை வலுப்படுத்தும் திசையில் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக பெண்கள் மற்றும் இரவு நேர பயணிகளின் பாதுகாப்பு கணிசமாக மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...